வட கொரியாவின் ஏவுகணைகளுக்கு தென் கொரியா பதிலடி : அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ஏவுகணை சோதனை
May 25 2022 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக, தென் கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து, சோதனை நடத்தியது.
தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, வட கொரியா கிழக்கு கடற்கரையில் பாலிஸ்டிக் ஏவுகணை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆசியாவை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி, கொரிய தீபகற்பத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை மிரட்டி வரும் வடகொரியாவுக்கு, தென்கொரியா பதிலடி கொடுத்துள்ளது. தென் கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து, சோதனை நடத்தியது. இந்த பயிற்சிகளில் அமெரிக்காவின் ATACMS மற்றும் தென் கொரியாவின் Hyunmoo-2 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்பரப்பில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.