உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தும் ரஷ்யா
May 26 2022 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் பகுதியில் 3 நகரங்களை ரஷ்யா தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்புத் தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி அந்நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியது. தலைநகர் கிய்வ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் கொடூர தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள் பின்னர் அப்பகுதிகளில் இருந்து வெளியேறி, தற்போது டொனெட்ஸ்க் பகுதியில் பயங்கர தாக்குதல் நடத்திவருகின்றன. இதற்கிடையே, டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள 3 நகரங்களைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய படைகள் அறிவித்துள்ளன. அப்பகுதியில் செயல்படும் மக்கள் குடியரசு என்ற ரஷ்ய ஆதரவு அரசியல் அமைப்பு இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.