அல்கொய்தா தலைவன் அல்-ஜவாரி மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பைடன் : செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி
Aug 2 2022 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அல்கொய்தா தலைவன் அல்-ஜவாரி கொல்லப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அல்கொய்தா தலைவன் அல்-ஜவாரி கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக கூறினார். எவ்வளவு காலம் சென்றாலும், எங்கு மறைந்திருந்தாலும், தங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை அமெரிக்கா நிச்சயம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று தெரிவித்தார். இரட்டைக் கோபுர தாக்குதலை என்றுமே மறக்க மாட்டோம் என்று கூறினார். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.