அல் - குவைதா தலைவர் அய்மான் அல் - ஜவாஹிரி கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு எச்சரிக்கை
Aug 4 2022 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அல்காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் - ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அமெரிக்க மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அல்காய்தா அமைப்பு, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் தற்கொலைப் படை தாக்குதல், குண்டு வீச்சு, ஆட்கடத்தல் போன்றவை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அமெரிக்க துாதரகங்களில் பதிவு செய்து, மொபைல் போனில் பயங்கரவாத அச்சுறுத்தல், பாதுகாப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும், உள்நாட்டு செய்திகளை உன்னிப்பாக கவனித்து, அமெரிக்க துாதரகங்களுடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், அமெரிக்கர்கள், உள்நாட்டு போர் நடக்கும் நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.