இரவு விடுதியில் பற்றிய தீயில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த அனைவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்
Aug 5 2022 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து நாட்டின் இரவு விடுதியில் பற்றிய தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் சோன்புரி மாகாணத்தில் செயல்பட்டு வரும் Mountain B என்ற இரவு விடுதியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்த போது நேற்றிரவு தீ பற்றியது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த அனைவரும் தாய்லாந்து நாட்டினர் என்றும், தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு ஒரு மணிக்கு தீ பற்றியதால், இரவு விடுதி வாடிக்கையாளர்கள் அங்குமிங்கும் ஓடியபோது பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.