கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - விரைவில் வழக்கமான பணிக்கு திரும்புவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு
Aug 7 2022 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21-ம் தேதி கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் கொரோனா தொற்றில் இருந்து நலம்பெற்றார். இதனிடையே ஜோ பைடனுக்கு கடந்த வாரம் மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பைடன் தன்னை தானே மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜோ பைடன் நாளை பார்வையிட உள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.