இலங்கை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த சீனா அழைப்பு
Aug 8 2022 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உளவு கப்பலான 'யுவான் வாங்-5' கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி சீனாவுக்கு இலங்கை அரசு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பிய நிலையில், கொழும்புவில் உள்ள சீனத்தூதரகம், இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளின் அவசர ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டும் இன்றி ஆராய்ச்சி கப்பல் வருகை குறித்து சீன தூதர் குய் ஜென்ஹாங், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பூட்டிய அறைக்குள் ஆலோசனை நடத்தியதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இலங்கை அதிபர் அலுவலகம் இதனை மறுத்துள்ளது.