சீனாவில் அறுவடைக்குத் தயாராகி வரும் சீன விவசாயிகள் : விவசாயிகளுக்கு அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து
Sep 23 2022 8:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் அறுவடைக்குத் தயாராகி வரும் விவசாயிகளுக்கு அதிபர் ஜி ஜின்பிங் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், கடந்த ஆண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இலையுதிர் காலப் பாதிப்புக்கள் ஏற்பட்டதாகவும், பல இடங்களில் மோசமான வானிலை, வறட்சி போன்ற பல்வேறு சவால்களைக் கடந்து விவசாயிகள் சாதனைகளைப் புரிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பயிரிடப்பட்டுள்ள கோதுமை, அரிசி உள்ளிட்ட பயிர்கள் தற்போது அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. சில பகுதிகளில் ஏற்கெனவே அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அதிபரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் விவசாயிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வேளாண் துறையை முன்னேற்றுவதன் மூலம் கடைக்கோடி கிராமங்கள் பெரிதும் பயனடைந்து வருவதாகவும், விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.