உலகப் பொருளாதார மந்தநிலை 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து வருவதாக உலக வங்கி எச்சரிக்கை
Sep 23 2022 6:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப் பொருளாதார மந்தநிலை 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து வருவதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக
உலக நாடுகள் பொருளாதார சலுகைகளை நீக்கி பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதனால் வரும் 2023-ம் ஆண்டு உலக பொருளாதார பெருமந்தம் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது. உலக வங்கி எதிர்பார்ப்பின் படி 2023ம் ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி வெறும் புள்ளி ஐந்து சதவீதமாக குறையலாம் என்றும் இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி தொடர்ந்து 3 வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதை உலக பொருளாதார மந்த நிலைக்கான எச்சரிக்கை மணியாகவும் வல்லுநர்கள் விமர்சிக்கினனர். பொருளாதார கட்டுப்பாடுகள் என்ற பெயரில் உலக நாடுகள் நுகர்வை குறைப்பதற்கு பதிலாக கூடுதல் நிதி ஒதுக்கி உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த பாதிப்பில் இருந்து மீள வாய்ப்புள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.