சீனாவில் மரத்தில் உள்ள துளைக்குள் பதுங்கிய பாண்டா கரடி : பொதுமக்களிடைய அதிக எண்ணிக்கையில் பகிரப்படும் காட்சிகள்
Sep 24 2022 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் மரத்தில் உள்ள துளைக்குச் சென்ற பாண்டா கரடி 3 மணிநேரத்துக்குப் பின் தான் வெளியில் வந்தது. இது குறித்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகிவருகின்றன.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாண்டா கரடிகளை இனவிருத்தி செய்ய அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாண்டா கரடிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஏராளமான இடங்களில் இன்ஃபிரேர்ட் கதிர்களைப் பயன்படுத்தும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பாண்டா கரடி ஒன்று மரத்தில் உள்ள பெரிய துளைக்குள் சென்று பதுங்கிக் கொண்டு, பின்னர் 3 மணிநேரம் கழித்து வெளியில் எட்டிப்பார்த்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இக்காட்சிகள் சீன அரசால் வெளியிடப்பட்ட நிலையில் ஏராளமான பொதுமக்கள் இவற்றைப் பகிர்ந்து வருகின்றனர்.