அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 4 பேர் கடத்தல் - மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரம்
Oct 4 2022 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 4 பேர் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த 36 வயதான ஜஸ்தீப் சிங், தனது மனைவி, 8 மாத குழந்தை மற்றும் உறவினர் ஒருவருடன் கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்கள் 4 பேரும் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களிடம் ஆயுதம் உள்ளதாகவும், அவர்கள் ஆபத்தானவர்கள் என்றும் கூறியுள்ள போலீசார், விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டால், பொது மக்கள் அவர்களை அணுகாமல், தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.