கத்தார் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் போது தீவிரவாதத் தாக்குதல் நடத்த ஈரான் ரகசிய திட்டம் - இஸ்ரேல் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் அதிர்ச்சித் தகவல்
Nov 23 2022 9:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் போது கத்தார் நாட்டில் மறைமுகமாகத் தீவிரவாதத் தாக்குதல் நடத்த ஈரான் ரகசியமாகத் திட்டமிட்டதாக இஸ்ரேல் நாட்டு உளவாளி தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கருத்தரங்கில் பேசிய இஸ்ரேல் ராணுவ மேஜர் ஜெனரல் Aharon Haliva இதைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கத்தார் நாட்டின் எதிர்நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது தெரியாத ஒரே காரணத்தால் அத்தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அவர் அப்போது தெரிவித்தார். ஈரானுக்கு எதிரான மேற்கு உலகின் பொருளாதாரத் தடைகளை எதிர்த்துப் போராடும் அந்நாட்டு அரசு உலக அளவில் தனது நிலையை விட்டுத் தர விரும்பவில்லை என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.