அமெரிக்கா, தென்கொரியா இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி வருவதற்கு எதிர்ப்பு - வடகொரியா 130 முறை பீரங்கியால் சுட்டதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்
Dec 6 2022 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்திவரும் நிலையில், அதற்குப் பதிலடி தரும் விதத்தில் வடகொரியா 130 முறை பீரங்கியால் சுட்டு, தனது எரிச்சலைக் குறைத்துக்கொண்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகளை மீறி வடகொரியா அணு ஆயுதப் பரிசோதனைகளில் இடுபட்டு வருகிறது. இதனால் அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. இது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடகொரியா 130 முறை பீரங்கியால் சுட்டு, தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளது.