கொலம்பியாவில் நிலச்சரிவில் சிக்கி புதைந்த பேருந்து- 3 சிறுவர்கள் உட்பட 33 பேர் உயிரிழப்பு
Dec 6 2022 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவில் நிலச்சரிவில் சிக்கி பேருந்து ஒன்று புதைந்ததில் 33 பேர் உயிரிழந்தனர். ரிசால்டா மாகாணத்தின் ப்யூப்லோ ரிக்கோ மற்றும் சான்டா சிசிலியா கிராமங்களுக்கு இடையே அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த போது கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகளுக்கும் மணலுக்கும் இடையில் பேருந்து சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் 9 பேரை உயிருடன் மீட்டனர். 3 சிறுவர்கள் உள்பட 33 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலநிலை மாற்றத்தால் கொலம்பியாவில் வழக்கத்திற்கு மாறாக கனமழையும் நிலச்சரிவும் அதிகரித்துள்ளன. நடப்பாண்டில் மட்டும் இயற்கைச் சீற்றங்களால் 216-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 5 லட்சத்து 38 ஆயிரம் பேர் வீடிழந்திருப்பதாகவும் கொலம்பிய அரசு தெரிவித்துள்ளது.