ஆஃப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழப்பு - விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என போலீசார் தீவிர விசாரணை
Dec 7 2022 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஃப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர். ஆஃப்கானிஸ்தான் நாட்டின் BALKH பகுதியில் ஹைராட்டான் எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிலாளர் பேருந்து அதிகாலையில் சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டு எல்லை அருகே அமைந்துள்ள இப்பகுதியில் இருநாடுகளையும் இணைக்கும் ரயில் மற்றும் சாலை வழித்தடங்கள் இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து வெடித்துச் சிதறியது ஒரு விபத்தா, வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.