சீன அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து நாஞ்சிங் நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் : அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு
Dec 7 2022 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து நாஞ்சிங் நகரில் பல்கலைக் கழக மாணவர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து சீன அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதில் கல்லூரி, பல்கலைக் கழக வளாகங்களில் கடைபிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்து அந்நாட்டு அரசு அமல்படுத்திய விதிகளுக்கு மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து நாஞ்சிங் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.