அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள அரசுக்கு பரிந்துரை
Jan 24 2023 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை கொரோனா
பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை, அரசுக்கு சில விஷயங்களை பரிந்துரைத்துள்ளது. இதன்படி, உருமாறி வரும் கொரோனா பாதிப்பில் இருந்து முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தப்பித்து கொள்ளும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை கொரோனா பூஸ்டர் டோசை செலுத்த ஒப்புதல் அளிக்கும்படி பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையின்படி, இனி ஆண்டுதோறும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளுக்கு மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது போன்று கொரோனா தடுப்பூசிகளை மக்கள் எடுத்து கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோக, கொரோனா பூஸ்டர் டோஸ்கள் அதிக அளவில் கிடைப்பது சிரமம் என்ற நிலையும் காணப்படுகிறது. அதனால், வருங்காலத்தில் எளிமையான நடைமுறையை மேற்கொள்ள இந்த விஷயம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.