இம்ரான்கானுக்கு அளித்த கூடுதல் பாதுகாப்பை திரும்ப பெற்ற விவகாரம் : இம்ரான்கான் கைது செய்யப்படலாம் என முன்னாள் அமைச்சர் சந்தேகம்
Jan 27 2023 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், தெரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு பஞ்சாப் மாகாண அரசு அளித்த கூடுதல் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதையடுத்து, இம்ரான் வீடு முன் அவரது கட்சி தொண்டர்கள் திரண்டனர். கடந்த ஆண்டு நவம்பரில் பஞ்சாப் மாநிலம் வாசிராபாத்தில் இம்ரான்கான் நடத்திய பேரணியில் அவரை சிலர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றனர். இதையடுத்து இம்ரானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனிடையே வன்முறையை தூண்டியதாக இம்ரான் கட்சியின் மூத்த தலைவரான பவத் சவுத்ரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இம்ரான்கானையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டு இருக்கலாம் என உள்துறை முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே இம்ரான்கானின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.