பாகிஸ்தானின் வளர்ச்சி மற்றும் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு : நிதியமைச்சர் இஷாக் தர் பேச்சு
Jan 28 2023 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் வளர்ச்சி மற்றும் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு என அந்நாட்டின் நிதியமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கிரீன் லைன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழாவில் பேசிய அவர், இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட நாடு என்பதால் கண்டிப்பாக முன்னேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். உருவாக்க முடிந்த அல்லாவால் அதனை பாதுகாக்கவும் முடியும் எனக் கூறிய அவர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையின் கீழ் பாகிஸ்தானின் நிலையை மேம்படுத்த இயன்றவரை முயற்சி செய்து வருவதாகவும் இம்ரான் கான் தலைமையிலான முந்தைய அரசின் மோசமான செயல்பாடுகளே தற்போதைய நிலைக்கு காரணம் என இஷாக் தர் குற்றம் சாட்டியுள்ளார்.