அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி - ஒரே மாதத்தில் நடந்த 4-வது துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் மக்கள் அச்சம்
Jan 29 2023 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயமடைந்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி க்ரெஸ்ட் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடந்து வருவது மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று கலிபோர்னியா நடன அரங்கில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். பின்னர் சான் பிரான்சிஸ்கோவின் ஹாஃப் மூன் பேயில் உள்ள ஒரு காளான் பண்ணையில் ஊழியர் ஒருவர், சக ஊழியர்கள் ஏழு பேரை சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.