பிரிட்டனை தொடர்ந்து நியூசிலாந்திலும் அரசு ஊழியர்கள் டிக்-டாக் பயன்படுத்த தடை : பயனாளர்கள் தகவலை சீன அரசுக்கு கசிய நேரிடலாம் என்பதால் தடை
Mar 17 2023 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து நியூசிலாந்தும் அரசு துறை ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் டிக் டாக் செயலி பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் அரசு அலுவலக செல்போன்களில் டிக் டாக் பயப்படுத்த தடை விதித்து நேற்று உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று நியூசிலாந்தும் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக் டாக் பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சீன அரசாங்கத்துடன் டிக் டாக் பயனார்களின் சுய விவரங்களை டிக் - டாக் நிறுவனம் தந்து விடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு நாடுகள் தடை பிறப்பித்துள்ள நிலையில், தற்போது நியூசிலாந்தும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. எனினும் பல்வேறு நாடுகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டிக் - டாக் நிறுவனம், தற்போது தனது நிறுவனத்தை விற்றுவிட ஆள் தேடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.