சென்னையில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழப்பு : 68 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை தகவல்
Mar 18 2023 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலருக்கு பார்வை பறிபோனதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதுவரை 16 மாகாணங்களில் இந்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்திய 68 நோயாளிகளுக்கு பார்வை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. 8 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட கண் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்தை பயன்படுத்திய நோயாளிகள் பலருக்கும் கண் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த சொட்டு மருந்து, தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது.