ராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்காவுடன் சண்டையிட 8 லட்சம் மக்கள் தயார்... வடகொரிய அதிபர் கிம்ஜாங் எச்சரிக்கை
Mar 19 2023 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்களது நாட்டில் உள்ள மக்களில் 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போரிட ஆர்வத்துடன் இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி அடிக்கடி அணு ஆயுத சோதனை நடத்துவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்படுகிறது.
அண்மையில் அமெரிக்கா -தென் கொரிய படைகள் கூட்டு ராணுவ போர் பயிற்சி மேற்கொண்டன. இதனால் ஆத்திரடைந்த வடகொரியா தங்களது நாட்டில் உள்ள மக்களில் 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போரிட ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ராக்கெட் சோதனையை காண்பது போன்ற படமும் வெளியிடப்பட்டுள்ளது.