பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு விரைவில் தடை... சட்ட ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தகவல்
Mar 20 2023 7:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை தடைசெய்ய சட்ட ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார். லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் சட்டக் குழு இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அதேநேரத்தில் ஒரு அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக தடை செய்வது நீதிமன்றத்தின் கையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இம்ரான்கானின் வீட்டில் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் தடை குறித்து ஆலோசித்து வருவதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்தார்.