கொரோனாவை விட கொடிய நோய் உலகை தாக்கப் போகிறது : உலக சுகாதார நிறுவனம் திடீர் எச்சரிக்கை
May 24 2023 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவை விட மிகக்கொடிய நோயை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்கவேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
புதிதாக உருவெடுக்க போகும் மிகக்கொடிய வைரஸ், 2 கோடி மக்களை பலி வாங்கிய கொரோனா வைரசை காட்டிலும் மிக கடுமையானதாக இருக்கும் என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். உயிரை கொல்லும் அடுத்த வைரஸ் விரைவாக வரக்கூடும் என எச்சரித்துள்ள டெட்ரோஸ், சாலையில் கீழே போட்டு மிதிப்பதை போல் இந்த வைரசை எளிதில் விரட்டமுடியாது என கூறியுள்ளார்.