பெரு நாட்டில் கோமாளிகள் தினத்தை முன்னிட்டு வீதியில் திரண்ட கோமாளிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த உள்ளூர் மக்கள்
May 26 2023 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில் கோமாளிகள் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோர் கோமாளி போல் வேடமணிந்து ஆடல், பாடலுடன் நடனம் ஆடி வந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஏழைகளின் கோமாளி என்றழைக்கப்பட்ட பிரபல கலைஞர் டோனி பெரேஜியின் நினைவாக ஆண்டுதோறும் கோமாளிகள் தினத்தை பெரு நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் லிமாவில் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு வண்ண உடையணிந்தும், முகங்களில் வண்ண சாயங்களை பூசிக்கொண்டும், கோமாளி போன்ற விக்குகளை தலையில் அணிந்தும், வீதிகளில் உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியை காண குழந்தைகளுடன் திரண்ட மக்கள், உற்சாகமாக ஆரவாரம் எழுப்பி கோமாளிகளை வரவேற்றனர்.