சீனாவில் பலத்த சூறாவளி காற்றால் பெரும் சேதம் : குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்கள் பாதிப்பு
Jun 2 2023 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சென்யாங், கையூயான் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. இதில், குடியிருப்பு கட்டிடங்கள், விளை நிலங்கள் உள்ளிட்டவை சேதமாகின. சூறாவளி தாக்குதலையடுத்து, மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சூறாவளியால் சுமார் 100 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.