இஸ்ரேல் தாக்குதலில் மூத்த மகனையும் இழந்த அல் ஜசீரா செய்தியாளர் வால் தஹ்துஹ் : அக்டோபர் மாதத் தாக்குதலில் மனைவி, 2 குழந்தைகளை இழந்த நிலையில் அடுத்த சோகம்
Jan 8 2024 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் தாக்குதலில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை பறிகொடுத்த அல் ஜசீரா தொலைக்காட்சியின் காசா பகுதி செய்தியாளர் வால் தஹ்துஹ், தற்போது தனது மூத்த மகனையும் தாக்குதலில் பறிகொடுத்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையைப் போன்றே பத்திரிகையாளராக இருந்த அவரது மகன் ஹம்சா, சக பத்திரிகையாளருடன் காரில் சென்று கொண்டிருந்த போது ரஃபாவில் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். தனது மகன் ஹம்சாவின் ரத்தம், காசாவில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களின் கடைசி ரத்தமாக இருக்க வேண்டும் என தஹ்துஹ் வேதனை தெரிவித்துள்ளார். காசாவில் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதற்கு அல் ஜசீரா கண்டனம் தெரிவித்துள்ளது.