வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி : 5-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்கிறார் ஷேக் ஹசீனா
Jan 8 2024 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து 5-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமர் பொறுப்பேற்கிறார். ஷேக் ஹசீனா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகளை எண்ணும் பணி உடனடியாகத் தொடங்கியது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள 264 தொகுதிகளில் அக்கட்சி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.