வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து : 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் சேதம்
Jan 8 2024 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின. வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உக்கியாவில் உள்ள குடுபாலோங் பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த நிலையில், ரோஹிங்கியா அகதிகள் முகாமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகி சாம்பலாகியதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.