வங்கதேச தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு : தேர்தல் வன்முறைகள், அதிகளவிலான கைதுகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தல்
Jan 9 2024 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், 5வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையும், அதிக அளவிலான கைது நடவடிக்கைகளும் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்பதை உணர்த்துவதாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவும் வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளபோதிலும், இந்திய பிரதமர் மோடி, ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.