சீனாவின் ரகசியங்களை உளவு பார்த்ததாக வெளிநாட்டவர் கைது : தேசிய ரகசியங்கள் உள்பட 17 உளவு தகவல்களை இங்கிலாந்துக்கு அளித்ததாக புகார்
Jan 9 2024 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் ரகசியங்களை இங்கிலாந்துக்கு உளவு பார்த்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் எம்.ஐ.6 அமைப்புக்காக ஹுவாங் என்ற வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், நீண்டகாலமாக உளவு பார்த்து வந்துள்ளார். அப்போது, சீனாவின் பல்வேறு தேசிய ரகசியங்கள் உள்பட 17 உளவு தகவல்களை இங்கிலாந்துக்கு ஹுவாங் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து அவரை கைது செய்ததாக சீனாவின் உளவு அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் எம்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.