இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : நில அதிர்வால் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்த மக்கள்
Jan 9 2024 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6 புள்ளி 7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதேபோல், பப்புவா நியூ கினியாவின் வடகடலோர பகுதியிலும் இன்று அதிகாலை 6 புள்ளி 5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.