ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள திவானியா நகரில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 4 குழந்தைகள் சிக்கி பரிதாபமாக பலி
Jan 9 2024 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக்கில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்கு பகுதியில் உள்ள திவானியா நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில், தீயில் சிக்கி 4 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்ததை அடுத்து மருத்துவமனை அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும்படி அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.