ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் நடத்திய வான்வழித்தாக்குதல் : அல்-கொய்தா அமைப்பின் முக்கிய தீவிரவாதி உயிரிழந்தார்
Mar 26 2017 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் நடத்திய வான்வழித்தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் முக்கிய தீவிரவாதி உயிரிழந்தார்.
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தவர் Qari Yasin. பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை இவர் தலைமையேற்று நடத்தியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க ராணுவம் சார்பில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் Qari Yasin கொல்லப்பட்டார். இந்த செய்தியை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. கொல்லப்பட்ட Quari Yasin, கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்குவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.