அமெரிக்காவின் கடல்பகுதியில், காயங்களுடன் மீட்கப்பட்ட கடல்பசு 8 மாத சிகிச்சைகளுக்கு பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது
Apr 25 2017 7:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கடல் பகுதியில் 900 பவுண்ட் எடையுள்ள ஆண் கடல்பசு ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது. அந்த கடல்பசுவை, டால்ஃபின் ஆராய்ச்சி மையத்தின் கடல்பசு மீட்புக்குழு மற்றும் புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் காயங்களுடன் இருந்த கடல்பசுவை மீட்டனர்.
கடல்பசுவின் முதுகெலும்பு மற்றும் வால் துடுப்பு பகுதியில் அதிகமான காயங்கள் இருந்தன. நீரில் நகர்ந்து செல்வதற்கும் கடல்பசு மிகுந்த சிரமப்பட்டது. இதையடுத்து, கடந்த 8 மாதங்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் புத்துணர்வு சிகிச்சைகளுக்குப்பிறகு கடல்பசு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.