அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய வாகனங்கள்
Apr 26 2017 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கனமழையை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.
வடக்கு கரோலினா மாகாணம், Raleigh பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Durham பகுதியில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதுவரை 13 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிறுத்தப்பட்ட ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.