கியூபாவில் கடற்கரையோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான நண்டுகள் அருகிலுள்ள காடுகளில் முட்டையிடுவதற்காக சாலைகளை கடந்து செல்கின்றன
Apr 26 2017 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கியூபாவில் கடற்கரையோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான நண்டுகள் அருகிலுள்ள காடுகளில் முட்டையிடுவதற்காக சாலைகளை கடந்து செல்கின்றன. இந்தக்காட்சி அவ்வழியாக செல்லும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கியூபாவிலுள்ள கடற்கரையோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான நண்டுகள் முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்வதற்காக அருகிலுள்ள காடுகளுக்கு வந்துள்ளன. இந்த நண்டுகள் சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் அருகிலுள்ள சாலைகளில் சாரை சாரையாக கடந்து செல்லும் காட்சிகளை அங்கு சாலை வழியாக பயணம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் நின்று ரசித்துச் செல்கின்றனர். மேலும், இந்த நண்டுகள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.
அதேசமயம், இந்த நண்டுகள் சாலைகளை கடக்கும் போது வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதும் வருத்தம் அளிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.