பிரிட்டன் ஆட்சியில் இருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 20 ஆண்டு விழா : உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வண்ணம் பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
Jun 21 2017 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டன் ஆட்சியில் இருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 20 ஆண்டு விழா அங்கு கொண்டாடப்பட்டது.
சீனாவில் உள்ள ஹாங்காங் நகரம் சுமார் 150 ஆண்டுகளாக பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்தது. பல கட்டங்களாக அங்குள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பிரிட்டிஷாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மூண்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் 20 வது ஆண்டு விழா ஹாங்காங் நகரில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சீன அதிபர் Xi Jinping கலந்து கொண்டார். அப்போது ராணுவ வீரர்கள் இசை வாத்தியங்களை இசைத்தனர். மேலும் சீனாவில் தேசிய கொடி மற்றும் ஹாங்காங் கொடி அகியவை ஏற்றப்பட்டன.
தொடர்ந்து இந்த சுதந்திரத்தை பெறுவதற்காக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வண்ணம் பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.