சியரா லியோன் நாட்டில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400 பேர் உயிரிழப்பு - ஏராளமானோர் மாயமாகி இருப்பதால், உதவிக்கு வருமாறு உலக நாடுகளுக்கு கோரிக்கை
Aug 16 2017 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சியரா லியோன் நாட்டில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதால் அந்நாடு உலக நாடுகளின் உதவியை கோரியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான சியரா லியோனில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் மிகப்பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, சேறு கலந்த வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால், சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இந்த மழைவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 400-ஐ தாண்டியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருக்கும் நிலையில், அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை. இதனால், மீட்புப்பணிகளுக்காக சர்வதேச உதவியை சியரா லியோன் கோரியுள்ளது.