இந்தியாவை கேலி செய்யும் சீன செய்தி நிறுவனத்தின் விஷமத்தனம் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் சர்ச்சை...
Aug 18 2017 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்னையில், இந்தியாவை கேலி செய்யும் வகையில், சீன அரசு செய்தி நிறுவனம், ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளது.
சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் சாலை அமைக்க சீனா முயன்றது. அதனை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இந்தியா - சீனா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக, எல்லைப் பகுதியில், இரு நாட்டுப் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னையில், போரை ஊக்குவிக்கும் வகையில், சீன செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், சீன அரசின் செய்தி நிறுவனமான, 'ஜியான்', நேந்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. டோக்லாம் பிரச்னை குறித்தும், இந்தியர்களை கேலி செய்யும் வகையிலும் அமைந்துள்ள இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.