வேல்ஸ் இளவரசி டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் நிறைவு : நினைவு தினமான ஆகஸ்ட் 31ம் தேதி ஏராளமான நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
Aug 19 2017 9:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேல்ஸ் இளவரசி டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அவரது நினைவு தினமான ஆகஸ்ட் 31ம் தேதி ஏராளமான நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த டயானாவை, இளவரசர் சார்லஸ் எவ்வித பாரபட்சமும் இன்றி காதலித்து திருமணம் செய்து கொண்டதைக் கண்டு இங்கிலாந்து நாடே மெய்சிலிர்த்துப் போனது. 1981ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், 15 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு 1996-ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாகவும், டயானாவுக்கு, மற்றவர்களுடன் ஏற்பட்ட சில முக்கிய தொடர்புகளே இதற்கு காரணமாக முன்வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு சமூக சேவைகள் மூலம் புகழ்பெற்றிருந்த டயானா, பொதுவாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். இந்நிலையில், டோடி முஹம்மது அல் ஃபாயித் என்ற தொழிலதிபருடன் டயானாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், 1997 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி நள்ளிரவு பாரிஸ் நகரின் சுரங்கப்பாதை ஒன்றில் காரில் சென்று கொண்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில் டயானா மற்றும் அவரது நண்பர் டோடி ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து நடைபெற்ற புலன் விசாரனையில் ஓட்டுனர் அதிகம் மது அருந்தியிருந்தால் விபத்து நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இருப்பினும் இது திட்டமிட்ட படுகொலை என்றும் செய்திகள் உலா வந்தன. டயானாவின் உடல் அடக்கம் 1997 செப்டம்பர் 6-ம் நாள் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பக்கிங்ஹாம் அரண்மனைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அனுதாபம் தெரிவித்தது.
உலகின் பெரும்பான்மையோரின் கவனத்தை ஈர்த்த டயானாவின் 20ம் ஆண்டு நினைவு தினம் வரும் அகஸ்ட் 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரிட்டனில் ஏராளமான நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டயானா தன் பொறுப்பில் துவங்கிய 110 அறக்கட்டளைகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.