மெக்ஸிகோவில் நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் Frida என்ற நாய் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெற்றது
Sep 23 2017 8:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்ஸிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் Frida என்ற நாய் ஈடுபட்டு, அனைவரின் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.
மெக்ஸிகோவில் சில தினங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஒன்றாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டட இடுபாடுகளில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமான கட்டடங்களும் தரைமட்டமாயின. இடுபாடுகளில் சிக்கி தவித்த 12 பேரை அடையாளம் காட்டிய Frida என்ற நாய், அவர்களை மீட்க பேரூதவியாக இருந்தது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரின் பாராட்டுதல்களை பெற்றதோடு, அனைவரும் Frida-வுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனிடயே, மெக்ஸிகோவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 8-ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அந்நாட்டு மீட்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.