ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக ஆவணங்கள் தயார் செய்வதில் பாகிஸ்தான் அரசு தீவிரம்
Oct 8 2017 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு எதிராக ஆவணங்கள் தயார் செய்வதில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவிற்காக உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது, கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தாவ் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அரசு பாகிஸ்தான் அரசு யாதவை கடத்தியதாக தெரிவித்தது. ஜாதவுக்கு வழங்கப்பட்டுள்ள, மரணதண்டனைக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில், மத்திய அரசு முறையிட்டது.இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து இருநாட்டு ஆவணங்களை சமர்பிக்கும் படியும் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாதவ், உளவு பார்த்ததற்கான ஆதாரங்கள், ஆவணங்களை சேகரிக்கும் பணியில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, அந்நாட்டு அரசு வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.