லிபியாவில் நடுக்கடலில் தத்தளித்த குழந்தைகள், பெண்கள் உட்பட 400 அகதிகள் மீட்பு : ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம்
Jan 17 2018 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லிபியாவில் நடுக்கடலில் தத்தளித்த குழந்தைகள், பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட அகதிகளை, கடலோர காவல் படையில் பத்திரமாக மீட்டனர்.
உள்நாட்டு போர் காரணமாக லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். கடல் வழியாக சாதாரண படகுகளில் பயணம் மேற்கொள்ளும் போது ஏராளமானோர் விபத்துக்குள்ளாகி பலியாகின்றனர். இந்நிலையில், லிபியாவில் இருந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டவர்கள், இரண்டு படகுகளில் மத்திய தரைக்கடல் வழியாகச் சென்றனர். அப்போது என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த அவர்களை, லிபிய கடலோர காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.