தேர்தல் தோல்வியால் பதவி விலகிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வெளிநாடு செல்ல தடை - ஊழல் புகாரில் சிக்கியதால் குடியுரிமைத்துறை உத்தரவு
May 13 2018 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலேசியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், தோல்வியடைந்து பதவி விலகிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில், கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தத் தேர்தலில் தோல்வியடைந்ததன்மூலம், மலேசியா சுதந்திரம் பெற்றதுமுதல் அந்நாட்டை தொடர்ந்து 61 ஆண்டுகள் ஆட்சி செய்துவந்த பாரிசன் நேஷனல் கூட்டணி, முதல்முறையாக ஆட்சியை இழந்தது.
இந்நிலையில், ஊழல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, நஜீப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடு செல்லத் தடை விதித்து அந்நாட்டின் குடியுரிமைத்துறை உத்தரவிட்டுள்ளது.