கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாடு : தெருக்கூத்து நாடகங்கள் - சினிமாவை விஞ்சும் வகையில் வசனங்களை பேசிய தெருக்கூத்து கலைஞர்கள்
May 20 2018 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெருக்கூத்தை வளர்க்கவும், கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கம்போடியாவில் நடைபெற்று வரும் உலகத் தமிழர் மாநாட்டில், தெருக்கூத்து நாடகங்கள் கோலாகலகமாக அரங்கேறின. இதில் சினிமாவை விஞ்சும் வகையில் வசனங்களை பேசி தெருக்கூத்து கலைஞர்கள் மக்களை கவர்ந்தனர்.
சினிமா மற்றும் சின்னத்திரை மோகத்தில் ஆட்கொள்ளப்பட்டதாலும், உரிய ஆதரவு கிடைக்காததாலும், தமிழகத்தைச் சேர்ந்த இந்நாடக நடிகர்கள் பொலிவிழந்து காணப்படுகின்றனர். தெருக்கூத்தினை புத்துயிர் அளித்து போற்றி காக்கவேண்டும், தெருக்கூத்து கலைஞர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தெருக்கூத்து நாடக கலைஞர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த தெருக்கூத்து நாடகங்களை நடிகர் சரத்குமார், இயக்குநர் தங்கர்பச்சான் உள்ளிட்ட பெரும்பாலானோர் தரையில் அமர்ந்து கண்டுரசித்தனர்.