பங்களாதேஷில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற பேரணியின்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் - 19 பேருக்கு மரண தண்டனை விதி‌த்து நீதிமன்றம் அதிரடி

Oct 10 2018 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

பங்களாதேஷில் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் கட்சி பேரணியின்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 19 பேருக்கு மரண தண்டனை விதி‌த்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பங்களாதேஷின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு டாக்காவில் பேரணி நடத்தியது. அதில், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷேக் ஹசீனா உட்பட அவரது கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது இந்த பேரணியில் வந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷேக் ஹசீனா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் அதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயம் அடைந்தனர். அதுதொடர்பான வழக்கு பங்களாதேஷ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் 19 பேருக்கு மரண தண்டனையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தரிக் ரகுமானும் ஒருவர் ஆவார். அதேபோல், இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் லுட்ஃபோஸ்மன் பாபரும் ஒருவர் ஆவார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரகுமான் தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00