கிரீஸ் நாட்டில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம்
Oct 26 2018 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரீஸ் நாட்டில் இன்று அதிகாலை 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணியளவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இத்தாலி மற்றும் அல்பேனியா நாடுகளிலும் உணரப்பட்டன.