நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
Oct 29 2018 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த சில தினங்களாக நேபாள பிரதமர் உடல்நலக் குறைவால் அவதியுற்று வருகிறார். இருமல் தொல்லை அதிகரித்ததால், தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மன்மோகன் கார்டியோ வஸ்குலர் மையத்தில், தீவிர சிகிச்சை பிரிவில் கேபி சர்மா ஒலி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், மார்பு தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவற்றால் கடும் அவதிக்கு உள்ளானார். மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட கேபி சர்மா ஒலியை, குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே கேபி சர்மா ஒலி பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.